நடிகை நயன்தாராவின் பவுன்சர்கள் தன்னை மிகவும் தரக்குறைவாக பேசியதாக டிக்டாக் புகழ் ஜிபி முத்து வேதனையுடன் கூறியிள்ளார்.

டிக்டாக் புகழ்

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. டிக்டாக் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் சென்ற அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜிபி முத்து 2-வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரண்டே வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

பட வாய்ப்புகள்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் இணைந்து நடித்த தனது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் ஜிபி முத்துவிற்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

தூரபோனு சொல்லிட்டாங்க

இந்நிலையில் ‘கனெக்ட்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு படம் பார்க்க சென்ற ஜிபி முத்து பாதியிலே வெளியேறினார். இதுக்குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த அவர், “கனெக்ட் படத்தின் ஈவண்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்ன விதம் வேற, ஆனா அங்கு நடத்துன விதம் வேற. நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு கூப்பிட்டாங்க. ஆனா அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க. எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. அதனால படம் பார்க்காமலேயே வெளிய வந்துட்டேன். இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது. அவரது பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க. தூரபோனு சொல்லிட்டாங்க. இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். பின்னர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார். பாதி தூரம் வந்துட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம்னு சொல்லிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here