மது அருந்தினால்தான் தூக்கமே வரும் என்ற நிலைமைக்கு ஆளானேன் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை

அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ‘பம்பாய்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. அதன்பிறகு கமல்ஹாசனுடன் ‘இந்தியன்’, அர்ஜூன் நடித்த ‘முதல்வன்’, ரஜினிகாந்துடன் ‘பாபா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த அவர், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் மீண்டும் ரீ என்டரி கொடுத்தார். அதில் தனுஷூக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். 2010-ம் ஆண்டு சாராட் என்பவரை திருமணம் செய்துகொண்ட மனிஷா கொய்ராலா, இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார்.

அடிமையானேன்

சமீபத்தில் மனிஷா கொய்ராலா அளித்துள்ள பேட்டியில் தான் மதுவுக்கு அடிமையானது குறித்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்தாவது; ஆரம்பத்தில் கேமிரா முன்பு தைரியமாக நடிப்பதற்காக மது குடிக்கத் தொடங்கினேன். ஆனால் நாளடைவில் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். மது குடிக்கவில்லை என்றால் இரவில் தூக்கமே வராது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்தப் பழக்கத்தால் என் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது. பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் பாடத்தை கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here