‘சர்தார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி, அதில் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசையும் வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ‘சர்தார்’. கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான இப்படத்தில், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் 5 நாட்களில் மட்டும் ரூ.50 கோடி வரை வசூலித்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

செம கிஃப்ட்

இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி. அதில் படக்குழுவினரும் அவர் அளித்த கிஃப்ட் தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக உள்ளது. ‘சர்தார்’ படம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரால் வரும் ஆபத்துகளை பற்றி பேசி இருந்தது. இதன் காரணமாகவே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை வழங்கி இருந்தனர். தற்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெள்ளியினால் ஆன ரூ.30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை பரிசாக வழங்கி உள்ளார் கார்த்தி. நடிகர் கார்த்தி அளித்த இந்த விலையுயர்ந்த பரிசின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. கார்த்தியின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here