தவறை சுட்டிக்காட்டினால் தான் திருத்திக் கொள்ள முடியும் என கூறியுள்ள பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் “நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் டூப்பர் ஹிட்

தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ், அடுத்ததாக மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதன்மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குநராக அல்போன்ஸ் புத்ரன் உயர்ந்தார்.

மோசமான விமர்சனம்

‘பிரேமம்’ படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிருத்விராஜ் – நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எந்தவித புரொமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘கோல்ட்’ வெளியானது. இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் பார்த்த ரசிகர்கள், தங்களுக்கு இப்படம் பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

நன்றி

ரசிகர்களின் விமர்சனங்களுக்கு இயக்குநர் அல்போன்ஸ் புதரன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; “ஒரு டீ நல்லா இல்லையென்றால், அது ஏன் நல்லா இல்லை என்று சொன்னால்தான், டீ தயாரித்தவரால் அடுத்த முறை தவறை திருத்திக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் டீ நல்லா இல்லை என்று தடாலடியாக சொல்லிவிட்டால், இரு தரப்புக்குமே பயன் இருக்காது. அதனால் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி.” எனக் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here