நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை

அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலினின் நிமிர், விஜய் சேதுபதி உடன் சீதக்காதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பார்வதி நாயர், ‘ஆங்கிரி பேபிஸ் இன் லவ்’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.

பரபரப்பு புகார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பார்வதி நாயர், தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த கடிகாரம், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் போனதாக கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் பணிபுரியும் சுபாஸ் சந்திரபோஸ் தான் இதை திருடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சுபாஸ் சந்திரபோஸ் பார்வதி நாயர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வழக்குப்பதிவு

இதனிடையே கடந்த மாதம் காவல் ஆனையர் வந்த நடிகை பார்வதி நாயர், தான் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுபாஸ் சந்திரபோஸ் தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டி வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here