தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கு எல்லோருடைய ஆதரவும் தேவை என நடிகை பிரியாமணி தெரித்துள்ளார்.

இப்படியெல்லாம் நடக்குமா?

ஹரி ஹரா பிக்சர்ஸ் தயாரிப்பில் கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாக உருவாகியிருக்கும் திரைப்படம் “DR 56”. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் பிரவீன் ரெட்டி. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி பிரியாமணி கலந்துகொண்டு பேசியதாவது, “சாருலதா படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் ‘DR 56’ என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்தக் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குநர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதைப் பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், “நீங்க சொன்ன மாதிரியே இந்தப் படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும்”னு சொன்னேன்.

இரண்டு காரணம்

இந்தக் கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன். ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன். பத்து வருடம் கழித்து நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன். அதுக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை. இவ்வாறு நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here