பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு – மரணம்

பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாவுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்ததையடுத்து, கிருஷ்ணாவுக்கு சுய நினைவு திரும்பியது. இருப்பினும் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரங்கல்

கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவு வருத்தமளிக்கிறது. தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர். அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here