சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மகர விளக்கு பூஜை

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண செல்லும் பக்தர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்து

சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து டிக்கெட்டுகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here