சென்னை தாம்பரம் – கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயனிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மின்சார ரயில்

சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலுருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரயில் மூலம் சென்னை நகருக்குள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் தவிப்பு

இந்த நிலையில், சென்னை எழும்பூர் – பூங்கா ரயில் பாதையில் உள்ள உயர்மின் அழுத்த கம்பியில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பணிக்கு செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனையடுத்து ரயில் பாதையில் ஏற்பட்டு கோளாறை ரயில்வே ஊழியர்கள் விரைவாக சரிசெய்ததையடுத்து, போக்குவரத்து சீரானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here