நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தா தனது உடல்நிலை குறித்து பேசி கண்ணீர்விட்டது அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. பிரபல நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ”யசோதா” திரைப்படம் வருகிற 11-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, தனது உடல்நிலை குறித்து கண்ணீர்மல்க கூறியுள்ளார். இதுதொடர்பாக சமந்தா பேசியதாவது; நான் எனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியது போல், சில நாட்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் கெட்ட நாட்களாகவும் இருக்கிறது. சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட ரொம்ப கடினமாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். என்னுடைய உடல் நிலை எனது உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்தேன். இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை. ரொம்ப கடினமான நிலையில்தான் இருக்கிறேன். இவ்வாறு சமந்தா பேசிக்க்கொண்டு இருக்கும் போது தீடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here