‘சர்தார்’ ஒரு படமல்ல; படிப்பினை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.

வரவேற்பு

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ‘சர்தார்’. கடந்த 21-ம் தேதி வெளியான இப்படத்தில், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கடந்த 5 நாட்களில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரமான படைப்பு

இந்நிலையில் ‘சர்தார்’ படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதனை பாராட்டியுள்ளார். “‘சர்தார்’ படம் என்று சொல்ல முடியாது; இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச்சொல்கிறது. மித்ரன் தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். இரும்புத்திரையிலும் பொறுப்புடன் ஒரு படத்தை உருவாக்கியிருந்தார். அவரிடம் சமூக பொறுப்புடன் ஒரு பார்வை இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை என தரமாக உள்ளது. அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது. ‘சர்தார்’ ஒரு சிறந்த படைப்பு. அன்பும் பாராட்டுகளும்” என்று சீமான் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here