தமிழ் சினிமாவுடனும், தமிழ்நாட்டு மக்களுடனும் நல்ல தொடர்பில் இருக்கிறேன் என பிரபல நடிகர் நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது; ‘ரட்சகன்’ படம் மூலம் அறிமுகமானாலும், ‘உதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்றேன். சினிமாவுக்கு மொழி, நாடு முக்கியமல்ல. நல்ல கதைதான் முக்கியம். கொரோனாவுக்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வந்து பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறார்கள். மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் நவீன ஒலியை கடும் உழைப்பால் சினிமாவுக்கு தருகிறார்கள். அந்த அனுபவத்தைப் பெற மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here