கேளடி கண்மணி, மகராசி, செவ்வந்தி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் பிரபல சீரியல் நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார். அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டதை நடிகை திவ்யா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ணவ் தற்போது தன்னை விட்டு விட்டு ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணைக்கு ஆஜர்

இந்நிலையில், நடிகர் அர்ணவ் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், திவ்யாவிற்கு முதலில் திருமணமாகி ஒரு குழந்தை இருந்த விஷயம் தனக்கு தெரிய வந்தும் இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருந்தோம். தற்போது தன்னை சந்தேகப்படும் படியாக திவ்யா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் அர்ணவ் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் 20 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here