எத்தனை கோடி கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ராமராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராமராஜன், மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். ‘சாமானியன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை ராமராஜன் தொடங்குகிறார். இதுதொடர்பாக பேசிய அவர், நல்ல கதை வந்தால் தொடர்ந்து நடிப்பேன் எனக் கூறினார். இரண்டாம் பாக கதைகளில் நடிக்க விருப்பம் இல்லை எனவும் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here