பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ராவணன்’ படத்தில் இடம்பெற்ற ‘கெடாகறி’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின் ‘எந்திரன் 2.0’, ‘சர்கார்’, ‘பிகில்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தார். மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் வெளியாக இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொன்னி நதி’ பாடலயும் பம்பா பாக்யா பாடியுள்ளார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பம்பா பாக்யா மரணத்திற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here