படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விரக்தி காரணமாக தான் அப்போது நடந்துகொண்ட விதம் குறித்து படத்தின் வெற்றி விழாவில் இயக்குநரிடம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிஸி நடிகை

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ”பிரேமம்”. இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை அனுபாமா பரமேஸ்வரன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது 18 பேஜஸ், பட்டர்ஃபிளை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த கார்த்திகேயா-2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மன்னிப்பு

கார்த்திகேயா-2 திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை அனுபாமா பரமேஸ்வரன், படத்தின் இயக்குநர் சண்டோ மேன்டிடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடந்தபோது எனக்கு காயம் ஏற்பட்டது. அப்போது கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். ஆனால் கடைசி நாளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் நான் விரக்தியடைந்தேன். அதற்காக இயக்குநரிடம் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வாழக்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான். இந்த படத்தில் சிறந்த கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு மிகவும் நன்றி. இவ்வாறு அனுபமா கூறியுள்ளார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here