ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் வகையில் கதை ஒன்றை வைத்திருப்பதாக பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கூறியுள்ளார்.

‘பிரேமம்’ புகழ்

தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ், அடுத்ததாக மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இதன்மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனராக அல்போன்ஸ் புத்ரன் உயர்ந்தார்.

கதை ரெடி

‘பிரேமம்’ படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிருத்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்ட்’ படத்தை இயக்கியுள்ளார். ரஜினி நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டுமென்பதே தனது லட்சியம் எனக் கூறி வந்த அல்போன்ஸ், தற்போது ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் வகையில், கதை ஒன்றை வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக தான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை கூறுவேன் எனவும் அந்த கதை அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கதை பிடிக்கும் பட்சத்தில் தனது முழு திறமையும் பயன்படுத்தி, நல்லதொரு பொழுதுபோக்கு படமாக எடுப்பேன் என்றும் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here