நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாகி 2012-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில், தங்களது 10-வது திருமண நாளை இருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பிரசன்னாவுடன் இருக்கும் ரொமேன்ஸ் போட்டோவை பகிர்ந்துள்ள நடிகை சினேகா, தங்களின் 10 ஆண்டு பயணம் எளிதல்ல எனத் தெரிவித்துள்ளார். நிறைய சண்ட, கருத்து வேறுபாடு, கொடுத்த வாக்குறுதிகளை மீறியதாக வருத்ததுடன் கூறியுள்ளார். பிரசன்னா இதயத்தையும் சில சமயங்களில் உடைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், பிரசன்னா எப்போதும் அன்பு காட்டுவதாகவும், அன்பால் அவர் மீண்டும் மீண்டும் தன்னை வெல்வதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here