திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சிறுவர்களுடன் கலந்துரையாடிய அவர், பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பின் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோரின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டீ அருந்தினார். அவர்கள் கொடுத்த இட்லி, வடை, சாம்பார், சட்னி ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார். தான் சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைகளுக்கு அவர் இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here