நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி உள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு, விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். ‘பயணி’ இசை ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பயணி’ இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here