தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனி. அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்த அவர், ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசி நாட்கள் வரை சிறப்பாக விளையாடி 3-வது இடத்தினைப் பிடித்தார். இந்த நிலையில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய பாவனி, தனது திருமணம் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை என்றும் தன்னுடைய முழு கவனமும் நடிப்பில் தான் இருக்கப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here