‘புஷ்பா-2 திரைப்படம் இன்னும் சிறப்பாகவும், பெரியதாகவும் இருக்கும் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

‘புஷ்பா’

அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த திரைப்படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனாவின் ‘நா சாமி’, சமந்தாவின் ‘ஒ சொல்றியா மாமா’ பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ராஷ்மிகா உறுதி

இந்த நிலையில், ‘புஷ்பா’ படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘புஷ்பா’ மீதான ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். தாங்கள் கடினமாக உழைக்க மட்டுமே விரும்புவதாகவும், புஷ்பா-2 இன்னும் சிறப்பாகவும், பெரியதாகவும் இருக்கும் என உறுதியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here