சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “மாநாடு” திரைப்படத்திற்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகக் கிடைத்துள்ளது. 

சூப்பர் ஹிட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த திரைப்படம் “மாநாடு”. சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி தியேட்டரில் வெளியானது. “மாநாடு” திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இத்திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

குவியும் விருதுகள்

இந்நிலையில், “மாநாடு” திரைப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது பிரவீன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here