தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தைத் திருநாள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சான்றோர் வாக்கின்படி, மக்கள் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தினர்.

உற்சாக கொண்டாட்டம்

அதைதொடர்ந்து பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். உலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கல் வைத்து படையலிட்டு இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் தங்கள் பாரம்பரிய வழக்கத்துடன் வீடுகளில் பொங்கல் வைத்து இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here