வாழ்வில் முதல்முறையாக நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

வேகமெடுக்கும் கொரோனா

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், அதிலிருந்து மீண்டும் வருகின்றனர். சத்யராஜ், குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மகிழ்ச்சி 

அந்த வகையில் நடிகை த்ரிஷாவுக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமை படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குணமடைந்துள்ளார். இதுதொடர்பாக நடிகை த்ரிஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில்; இதுவரை நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததே இல்லை. ஆனால் தற்போது முதல் முறையாக மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் அன்புக்கு நன்றி. இவ்வாறு த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here