தமிழில் தனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஆஷா சரத் தெரிவித்திருக்கிறார்.

திருப்புமுனை

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும், த்ரிஷ்யம் திரைப்படம் ஆஷா சரத்துக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார் ஆஷா சரத். தற்போது அன்பறிவு என்னும் பத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். இப்படத்தில் ஹிப்ஆப் ஆதிக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார்.

மகிழ்ச்சி

இதுகுறித்து ஆஷா சரத் கூறியதாவது; த்ரிஷ்யம் படத்தொடர் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு நல்ல கேரக்டரை வழங்கினார். அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து இதேபோல் அனைத்துவித கேரக்டர்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது. இவ்வாறு நடிகை ஆஷா சரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here