நடிப்பு, நடனம், மருத்துவத்தை தவிர்த்து தனக்கு மிகவும் ஆர்வத்தை கொடுக்கும் விஷயம் தியானம் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.  

மிகப்பெரிய வெற்றி

‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவிக்கு, அப்படம் கொடுத்த அறிமுகம் பல மொழிகளில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. மேலும் இந்த படம் மலையாளத்தில் வெளியான நிலையில் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது அடுத்தடுத்த படங்களை மிக முக்கியமான கதைகளுடன் சிறந்த கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி, மற்ற நடிகைகளை விட கதைகள் தேர்ந்தெடுப்பதில் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார். தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., தனுஷூடன் மாரி 2 படங்களில் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

உங்களை நீங்கள் நேசியுங்கள்

சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நடிகை சாய்பல்லவி கூறுகையில்; நாம் செய்யும் பணியினால் சுற்றி இருப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடிந்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஒரு நடிகையாக எனது நடிப்பின் மூலம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. நடிப்பு, நடனம், மருத்துவம் இதை தவிர்த்து எனக்கு மிகவும் ஆர்வத்தை கொடுக்கும் விஷயம் தியானம். என்னைப் பற்றி என்னை சுற்றி இருக்கும் நிலைமைகளைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது. இந்த தலைமுறை பெண்களுக்கு நான் சொல்வது என்னவென்றால். உங்களை நீங்கள் கவுரவித்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் நேசியுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அப்படி இருந்தால்தான் மற்றவர்கள் மீது உங்களுக்கு ஒரு நேர்மறையான உணர்வு ஏற்படும். இவ்வாறு சாய் பல்லவி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here