தனது காதல் மனைவியை தன்னிடமிருந்து பிரிப்பதற்காக பலர் முயற்சி செய்தார்கள் என பாடலாசிரியர் சினேகன் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆரம்பத்திலிருந்தே கன்னிகா ரவியை தான் காதலிக்கும் செய்தியை கேட்டதும் பலர் அவரிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என பல செயல்களை செய்து கொண்டிருந்தார்கள் எனத் தெரிவித்தார். ஆனால் சினேகன் மீது தான் வைத்திருக்கும் அன்பு எப்போதும் மாறாது என்று கன்னிகா விடாபிடியாக இருந்ததாகவும், அவரிடம் வந்து யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே தன்னிடம் சொல்லி விடுவார் எனவும் சினேகன் கூறினார். கோபப்படும் நேரங்களிலும் தனக்கு கன்னிகா ரவி ஆறுதலாக இருந்து வருவதாகவும் சினேகம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here