குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

வீரர்கள் மரணம்

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 14 பேருடன் சென்ற ராணுவ ஹொலிகாப்டர் கடந்த 8-ம் தேதி குன்னூர் அடுத்த காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேபடன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 80 சதவிகித தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

விமானப் படை அறிவிப்பு

வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெற வேண்டி ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் கேப்டன் வருண் சிங்கிற்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here