‘ஜெய் பீம்’ திரைப்பட விவகாரத்தில் தனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

பாராட்டு, சர்ச்சை

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயரிப்பில், சூர்யா நடிப்பில் கடந்த 2-ம் தேதி OTT தளத்தில் வெளியானது ‘ஜெய்பீம்’ திரைப்படம். இதில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1995-ம் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘ஜெய்பீம்’ திரைப்படம் உருவாகியிருந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதயம் கனிந்த நன்றி

இந்த நிலையில், நடிகர் சூர்யா ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜெய் பீம்’ படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பு என்னை நெகிழச் செய்துள்ளது. இதற்கு முன்னாள் இப்படி ஒரு அன்பை நான் பார்த்ததில்லை. எனக்கு நீங்கள் அளித்த நம்பிக்கைக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்களுடன் துணை நின்றதற்கு இதயம் கனிந்த நன்றி. இவ்வாறு நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here