விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன் துவங்கியது. இதில் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இசைவாணி, சின்னப் பொண்ணு, இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களது கதைகளை சொன்ன நிலையில், இன்று திருநங்கை நமிதா தனது கதையை கூறுவது போன்ற காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று இருந்தன. அப்போது பேசிய நமிதா, சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் பார்க்கின்றனர். எல்லோரும் என்னை மாறுங்கள் என்கிறார்கள். முதலில் நீங்கள் மாறுங்கள். நாங்கள் எப்பொழுதோ மாறிவிட்டோம் எனக் கூறி கண்ணீர்விட்டு அழுதார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here