தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் புகழாரம் சூட்டிய ஸ்டாலின், அவர் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here