வாணி ராணி, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பிரபல நடிகை நீலிமா ராணி. சின்னத்திரை தவிர சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நீலிமாவுக்கு, தற்போது ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தனது கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள நீலிமா, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். ஜனவரியில் நாங்கள் நான்காகப் போகிறோம் என்றும் இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here