மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. இத்திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, எஸ்.பி.ஜனநாதனை இழந்த நிலையில் ஒரு பாவியை போல தன்னை உணர்வதாகவும், தந்தை மகன் உறவு போல அவர் இருக்கும்போது அவரது அருமை புரியவில்லை எனவும் கூறினார். மேலும் அவர் மரணம் மூலம் காலம் கேவலமானது என உணர்வதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here