தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மம்முட்டி வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை, கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here