வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, ஆபாசப் படத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக பெண் ஒருவர் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசில் புகார் அளித்தார். மேலும் ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை சில ஆப்களின் வழியாக வெளியிடுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மும்பையின் மாத் பகுதியில் உள்ள பங்களாவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆபாசப் படத்தின் இயக்குநர் என கருதப்படும் ரோவா கான் உட்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். 45 வயதான ராஜ் குந்த்ரா இந்த குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here