சென்னையில் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

படிப்படியாக குறைவு

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2-ம், அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் அரசு மேற்கொண்ட ஊரடங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பலகட்ட நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் மிக மும்முரமாக நடந்து வருகின்றன. அரசியல் பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி போடுங்கள்

அந்த வகையில், தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதுதொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here