தன் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் எனவும், அரசியல் இருக்கும் மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய அவர், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார். பொய் குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும் எனவும், உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களை சேர்த்து கட்சியை மீண்டும் மாசுபடுத்த விடமாட்டோம் எனவும் கமல்ஹாசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here