இளம் நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 2-வது அலை வேகமாக பரவி வருவதால், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் மத்திய – மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தொற்று உறுதி

இந்த நிலையில், நடிகர் முரளியின் மகனும், இளம் நடிகருமான அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதர்வா கூறியிருப்பதாவது: “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அதர்வா குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here