பெங்களூருவிலிருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார் என்றும் இனி நடக்க வேண்டியது நடக்கும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாளின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் நம்பிக்கை

புதுக்கோட்டையில் திமுக நிர்வாகி சந்திரசேகரனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார். திமுக ஆட்சியின் போது முதல்வர் கருணாநிதி ரூ.7000 கோடி விவசாய கடன்களை ரத்து செய்ததை சுட்டிக்காட்டிய அவர், அதிமுக அரசு தேர்தலுக்காவே விவசாய கடனை தள்ளுபடி செய்ததாக குற்றம்சாட்டினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு செய்ய தவறியதை திமுக செய்தது எனவும் ஸ்டாலின் கூறினார்.

நடக்க வேண்டியது கண்டிப்பாக நடக்கும்

பெங்களூருவில் இருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார். இனி என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நடக்க வேண்டியது கண்டிப்பாக நடக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று முன்பு கூறியிருந்தேன். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here