தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பிக் பாஸ்’

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதி. சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த செய்திகள் அதிகளவில் இடம்பெறுவதால், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்து வருகின்றனர்.

பெரிய மாற்றம்?

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் பிக் பாஸ் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3வது சீசனை தொகுத்து வழங்கிய நாகார்ஜூனா, தற்போது 4வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசன்-3ல் நாகார்ஜூனா சில காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 4 துவங்கியுள்ள நிலையில், நாகார்ஜூனா நடித்து வரும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு அவர் விடுப்பு எடுத்துள்ளார். நாகார்ஜூனாவிற்கு பதிலாக நடிகை சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here