போதைப் பொருள் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான பிரபல நடிகை தீபிகா படுகோனேவிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சிக்கும் நடிகைகள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பிறகு, பாலிவுட் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திரைத்துறையில் போதைப் பொருள் பழக்க விவகாரம் தலை தூக்கவே, தற்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் விசாரணையை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சுஷாந்த் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர், சுஷாந்த்தின் முன்னாள் மேலாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீபிகா படுகோனா, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷரத்தா கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.  

பல மணி விசாரணை

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று நடிகை ரகுல் பிரீத் சிங் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகைகளிடம் 20க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here