மலையாள திரையுலகைச் சேர்ந்த பலர் போதைப் பொருளை பயன்படுத்துவதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

சிக்கித்தவிக்கும் சினிமா

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே தற்போது போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கன்னட திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, நடிகை ராகினி திவேதி உள்ளிட்ட பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததையடுத்து, சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 25 முன்னணி நடிகைகளின் பெயர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் நடிகை ராகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் ஆகியோரும் இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.

பரபரப்பு புகார்

இந்த பிரச்சனைகளை எல்லாம் தீவிர விசாரணையில் இருந்து கொண்டிருக்கும் வேலையில், போதைப் பொருள் சர்ச்சைப் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; “சூட்டிங் சமயங்களில் கேரவன் அருகில் செல்ல முடியாத அளவிற்கு வாடை அடிக்கிறது என புரொடக்ஷன் பாய்ஸ் கூறும் அளவிற்கு மோசமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மலையாள திரையுலகிலும் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கனவே ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போதைப் பொருள் புழக்கம் அதிகமாக மலையாள திரையுலகிலும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சுரேஷ்குமாரின் இந்த குற்றச்சாட்டை கேள்விப்பட்ட மலையாள சினிமா துறையினர் கதிகலங்கி நிற்கின்றனர். இந்த பிரச்சனையில் யார் யார் சிக்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here