‘மாஸ்டர்’ திரைப்பட ரிலீஸ் குறித்து நடிகர் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

‘மாஸ்டர்’

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். ‘தளபதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய், தனது அசாத்தியமான நடிப்பு, நடனம் போன்றவைகளால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “மாஸ்டர்” திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மகேந்திரன், அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

பின்னர் ‘மாஸ்டர்’ திரைப்படம் OTTயில் ரிலீஸாகிவிடும் என ஒரு தரப்பாலும், தியேட்டரில் தான் ரிலீஸாகும் என மற்றொரு தரப்பாலும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ‘மாஸ்டர்’ படம் தியேட்டரில் தான் ரீலீஸ் ஆகும் என படக்குழு உறுதி அளித்தது. தியோட்டர்கள் திறக்கப்படும்போது முதல் திரைப்படமாக ‘மாஸ்டர்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியிடவும், அதே வருடம் தீபாவளிக்கு ‘தளபதி 65’ படத்தை வெளியிடவும் நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், ‘மாஸ்டர்’ பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here