சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை, கைது

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர்களின் இந்த கருத்துக்கு நடிகர், நடிகைகள் சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சுஷாந்த் சிங் மரண வழக்கு தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி இருக்கிறது. நடிகையும், சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தி வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பிப் பிரிவு போலீசார், அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தியை கைது கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து நேற்று நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்கு சர்ச்சை

ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டது குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப் பொருளை, தேனீரியில் கலந்து கொடுத்தார் என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் சுஷாந்த்தின் ரசிகர்கள் பலரும் டாப்சியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here