சூர்யாவுடன் நடிக்க வீட்டில் அடம்பிடித்துள்ளேன் என்று பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், நடிகையுமான ஸ்ருதிகா தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிகா

கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா. அதன்பிறகு ‘ஆல்பம்’, ‘நளதமயந்தி’, ‘தித்திக்குதே’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சொப்னம் கொண்டு துலாபாரம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு 8 வயதில் மகன் உள்ளார்.

சின்ன பையன் போலவே இருக்கிறார்

பல ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ருதிகா, தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசினார். இதுபற்றி ஸ்ருதிகா கூறுகையில்; சூர்யாவுடன் நடிப்பதற்கு யாருக்கு தான் ஆசை இருக்காது. நானும் எங்கள் வீட்டில் அடம்பிடித்து உள்ளேன். எனக்கு நடிப்பு சுத்தமாக வராது. நடிக்கத் தெரியாமல் இயக்குநரிடம் நிறைய திட்டு வாங்கி அழுது இருக்கிறேன். நடிகர் விஜய் இப்போ வரைக்கும் சின்ன பையன் போலவே இருக்கிறார். அவரது மகனையும், அவரையும் ஒன்றாக நிற்க வைத்து பார்த்தால் இரண்டு பேரும் அண்ணன் தம்பி போலவே இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் என்னுடைய ரசிகர்கள் என்னை மறந்துவிட்டார்கள். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டேன். அதன் வழியாகத்தான் என்னை கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது விளம்பர படத்திலும், வெள்ளித்திரையிலும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. இவ்வாரு ஸ்ருதிகா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here