போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள்

போதைப் பொருள் விவகாரம் திரைத்துறையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கன்னட சினிமாவில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் ஏற்கனவே பரபரப்பான புகார் ஒன்றை கூறியிருந்தார். இதுதொடர்பாக டிவி நடிகை அனிகாவை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவருக்கும் கன்னட சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அனிகா போதை மருந்துகளையும், மாத்திரைகளையும் விற்றதாகவும் கூறப்படுகிறது.

சிக்கிய நடிகை

போதைப் பொருள் தொடர்பாக பரபரப்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரபல நடிகை ராகினி திவேதிக்கு அதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாரு ராகினி திவேதிக்கு பெங்களூரூ குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார். ஆனால், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகினி, தான் தலைமறைவாகவில்லை என்றும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு தான் கண்டிப்பாக பதிலளிப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

பரபரப்பான ரெய்டு

இந்த நிலையில், நடிகை ராகினி திவேதி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தனர். ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டிருந்த நடிகை ராகினி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை கைதான சம்பவம் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வீரா மடகாரி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ராகினி திவேதி, தமிழில் ‘அரியான்’, ‘நிமிர்ந்து நில்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here