இந்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அஞ்சலி நடிக்க இருக்கிறார்.

மிகப்பெரிய வெற்றி

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதனையடுத்து தமிழில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘பிங்க்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

தெலுங்கு ரீமேக்

ஸ்ரீராம் வேனு இயக்கும் இந்தப் படத்தில், அமிதாப் பச்சன் கேரக்டரில் பவன் கல்யாணும், டாப்ஸி கேரக்டரில் நிவேதா தாமஸூம் நடிக்கின்றனர். இந்த நிலையில், அந்தப் படத்தில் தற்போது நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார். இந்தியில் கீர்த்தி குர்ஹாரி கேரக்டரில் அஞ்சலி நடிக்கிறார். இதுகுறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here