புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகை டாப்ஸி விளக்கமளித்துள்ளார்.

முன்னணி நடிகை

தமிழில் தனுஷூக்கு ஜோடியாக ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தனது நடிப்புத் திறமையால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

உண்மைதான்

சமீபத்தில் டாப்ஸி நடிக்கும் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகை டாப்ஸி சமீபத்தில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நான் இணைந்து நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். கதை எனக்கு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படம். எனவே ஒரேகட்டமாக 28 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here