சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்ததுடன், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வருவதால், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

விலை உயர்வு

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சவரன் ரூ. 104 உயர்ந்து ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை ரூ.13 உயர்ந்து ரூ.4,912க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.71.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here